திருக்குறள்

1217.

நனவினான் நல்காக் கொடியார் கனவினான் என்னெம்மைப் பீழிப் பது.

திருக்குறள் 1217

நனவினான் நல்காக் கொடியார் கனவினான் என்னெம்மைப் பீழிப் பது.

பொருள்:

நேரில் வந்து அன்பு காட்டாத கொடிய நெஞ்சமுடையவர், கனவில் வந்து பிரிவுத் துயரைப் பெரிதாக்குவது என்ன காரணத்தால்?.

மு.வரததாசனார் உரை:

நனவில் வந்து எமக்கு அன்பு செய்யாத கொடுமை உடைய அவர், கனவில் வந்து எம்மை வருத்துவது என்ன காரணத்தால்?.

சாலமன் பாப்பையா உரை:

நேரில் வந்து அன்பு செய்யாத இந்தக் கொடிய மனிதர் கனவில் மட்டும் நாளும் வந்து என்னை வருத்துவது ஏன்?.